முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை கவர்னரிடம் 3-வது நாளாக தொடரும் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

பாண்டிச்சேரி, ஏப்.27 - புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங், கறுப்பு பண மன்னன் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க சிபாரிசு செய்த விவகாரத்தால் எழுந்த பெரும் சர்ச்சையையடுத்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கடந்த 20ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் புதுவை வந்து கவர்னரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் மீண்டும் கவர்னர் இக்பால் சிங்கிடம் விசாரனை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணி நேரம் நடந்தது. இந்த நிகழ்ச்சி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. மேலும் அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் டெல்லி மும்பையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலமும் அத்காரிகள் விசாரணை செய்தவாறே உள்ளனர். கடந்த 2 நாட்களாக விசாரணை செய்த அதிகாரிகள் நேற்று 3 வது நாளாக விசாரணை செய்தனர்.

இதனிடையே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியது, மற்றும் குருத்தவாராவுக்கு நிலம் ஒதுக்கிய தொடர்பான புகார்களின் மீது விசாரணை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்