முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 பேர் நீக்கப்பட்ட விவகாரம் - கராத்தே தியாகராஜன் அறிக்கை

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - 19 பேர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தற்போது அந்தர்பல்டி அடிப்பதாக காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

தங்கபாலு நேற்று ஒரு அந்தர்பல்டி அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் தொண்டர்களை கடும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார். 19 பேரை கடந்த 13​ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே கட்சியை விட்டு nullநீக்கியிருப்பதாக அதிரடி அறிக்கை வெளியிட்டார். 

நேற்று வெளியிட்ட அறிக்கையில், வாக்குப்பதிவு முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரிடமிருந்து மேலும் நிறைய புகார்கள் வந்திருப்பதாகவும், அந்த புகார்கள் மீது தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிசீலனை அறிக்கை வந்தபிறகு தமிழ் நாடு காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருக்கிறார். 

அவரது நேற்றைய அறிக்கை மூலம் முந்தைய நீnullக்குதல் அறிவிப்பு செல்லாதது முறையற்றது என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். கட்சியை விட்டு nullநீக்கியதாக வெளியிட்ட அறிக்கையில், நான் உள்ளிட்ட 19 நபர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து nullநீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சி உறுப்பினர்கள் யாரும் மேற்படி நபர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆனால் இப்போதைய அறிக்கையில், நடை பெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்ட சிலர் காங்கிரசிலிருந்து இடைnullக்கம் செய்யப்பட்டார்கள் என்று அப்படியே பல்டி அடித்திருக்கிறார். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழி ஆத்திரத்தில் nullநீக்கம் அறிவிப்பை வெளியிட்ட தங்கபாலு கட்சியையும், தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நாலாபுறமிருந்தும் எழுந்த கண்டனக் கணைகளிலிருந்து தப்பிக்க இப்படி ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். எங்களுக்கு ஒரு nullநீதி அடுத்தவர்களுக்கு ஒரு நீnullதி என்கிற தங்கபாலுவின் மாய் மாலத்தை எப்போதும் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்