எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர்,மே.27 - மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. கடத்தப்பட்ட சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்த குமார் படேல் மற்றும் அவரது மகன் உள்பட 10 பேர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டுக்காயங்களுடன் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
ஆந்திரா, ஒரிசா, பீகார், சத்தீஷ்கர்,ஜார்க்கண்ட், அசாம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகள் செயல்படுத்த முடியாத பல கோரிக்கைகளை சாக்குப்போக்காக வைத்து அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளை கொன்று குவித்து வருகின்றன.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் கடத்தல், கொள்ளையடித்தல்,படுகொலையில் ஈடுபடுதல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள ஜக்தால்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாற்ற யாத்திரை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. யாத்திரையை முடித்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் காரிலும் ஜீப்களிலும் ஜக்தால்பூருக்கு திரும்பிக்கொண்டியிருந்தனர். அந்த பகுதியில் வனப்பகுதியும் உள்ளது. இவர்கள் சென்ற வாகனங்கள் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் தர்பாகாட்டி கிராமத்தை கடந்து சென்றகொண்டியிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ஒளிந்திருந்து 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களை வழிமறைத்தனர். சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். மரங்களையும் வெட்டிப்போட்டு தடுத்து நிறுத்தினர். அவர்கள் வந்த வாகனம் செல்ல முடியாமல் நின்றபோது அவர்களை நோக்கி இயந்திர துப்பாக்கிகளால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு காங்கிரஸ் தலைவர்களுடன் வந்த பாதுகாவலர்களும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் வைத்திருந்த துப்பாக்கிக்குண்டுகள் தீர்ந்துவிட்டன. இதை பயன்படுத்திக்கொண்டு மாவோயிஸ்ட்கள் தங்கள் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரா கர்மா உடலை துப்பாக்கி தோட்டாக்களால் சல்லடைபோல் துளைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார். அவரைத்தவிர் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கோபால் மாதவன், முன்னாள் எம்.எல்.ஏ., உதயா ஆகியோர் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்றும் மேலும் 5 பேர் பாதுகாப்பு அதிகாரிகளாவார்கள். காயம் அடைந்தவர்களில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா, பழங்குடியினர் பெண்தலைவர் பூலோ தேவி ஆகியோரும் அடங்குவர். வி.சி.சுக்லாவின் உடலில் 3 குண்டுகள் பாய்ந்தன. அவர் ஆபத்தான நிலையில் ஜக்தால்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவசர அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார். இருந்தபோதிலும் உயர் சிகிச்சைக்காக அவர் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான மகேந்திர கர்மா, மாவோயிஸ்ட்களுக்கு எதிராக சல்வாசூடும் என்ற அமைப்பை ஏற்படுத்தி தீவிரமாக செயல்பட்டவர். எனவே அவரை குறிவைத்தே இத்தாக்குதலை நடத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் அவரது மகன் தினேஷ் மற்றும் பலரை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தநிலையில் படேல், அவரது மகன் தினேஷ் உள்பட 10 பேர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் கிடப்பதை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் கண்டுபிடித்து எடுத்துள்ளனர். இவர்களை சேர்த்து மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் உடல்கள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஸ்தர் பகுதியில் உள்ள ஜிராம் வனப்பகுதியில் கிடந்தன. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் 37 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புபணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று சத்தீஷ்கர் மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராம் நிவாஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போன காங்கிரஸ் தொண்டர்கள் ஜக்தல்பூருக்கு திரும்பிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.