முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் அரியானா - பீகாரிலும் திறக்க திட்டம்

புதன்கிழமை, 29 மே 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி,மே. 30 - திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்ற தோற்றம் கொண்ட கோவில்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ளன. டெல்லியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தற்போது அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் டெல்லியில் கூறியதாவது, 

திருப்பதி ஏழுமலையான் போன்ற தோற்றமுடைய கோவில்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திறக்க திட்டமிட்டுள்ளோம். முதன்முதலாக டெல்லியில் திருப்பதி கோவில் இன்று திறக்கப்படுகிறது. 

இந்த கோவிலில் உள்ள அனைத்து அம்சங்களும் திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே இருக்கும். திருப்பதி தேவஸ்தானமே இதனை நிர்வகிக்கும். அடுத்த கட்டமாக அரியானா மாநிலம் குருஷேத்திரத்திலும், பீகாரில் பாட்னாவிலும் இந்த கோவில்கள் அமைக்கப்படுகிறது. டெல்லியில் கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு ரூ. 20 கோடிசெலவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்