முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கடாபி மகன் உடல் அடக்கம்

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி,மே.5 - குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கடாபியின் மகன் உடல் முஸ்லீம் முறைப்படி  அடக்கம் செய்யப்பட்டது. லிபியா நாட்டில் சர்வாதிகாரி மம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக் காரர்களை அடக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ராணுவத்தினர் மீது அமெரிக்க நேட்டோ படையினர் குண்டு வீசி தாக்கி வருகின்றனர். நேட்டோ படைகள் நடத்திய குண்டு வீச்சின் அதிபர் மம்மர் கடாபியின் மகன் பலியானார். அவருடைய உடல் தலைநகர் திரிபோலி அருகே உள்ள அல்கனி இடுகாட்டில் முஸ்லீம் சம்பிராதயப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கடாபி வாழ்க, கடாபி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோஷமிட்டனர். கடாபியின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கடாபியின் மகனது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்