முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு திட்டம்: ராகுல் காந்தி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.29 -  உணவு பாதுகாப்பு திட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார். இதை காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:

மக்களுக்கு நாம் இந்த உரிமையை வழங்கியுள்ளோம். அவர்கள் தங்கள்  உரிமைககாக போராடுமாறு அவர்களை நாம் தயார் படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை நாம் நிறைவேற்றிய பிறகு நாட்டில் இனிமேல் எவரும் பசியால் தூங்கக் கூடாது. கல்விக்கான உரிமை, தகவல் அறியும் உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, ஆதார் அடையள அட்டை வழங்கும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை நாம் மக்களுக்கு வழங்கியதை அடுத்து தற்போது, உணவு பாதுகாப்பு திட்டம் வந்துள்ளது என்றார். பொது விநியோகத் துறையில் சில குறைபாடுகள் உள்ளது குறித்து கவலை தெரிவித்த ராகுல் காந்தி இந்த குறைகள் விரைவில் களையப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.வி.தாமஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள், எம்.ஏல்.ஏ.க்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்துக்கு முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி பெயரிட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரிட்டுள்ளதை அவர்கள் மேற்கோள் காட்டி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பெயரிட வேண்டும் என்று  கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்