எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி,மே.10 - வாக்கு எண்ணிக்கை மையங்களை இன்றைக்குள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 13 ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்றைக்குள் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேவையற்ற நபர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைவதை தடுக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கிலும் 3 அடுக்கு தடுப்பை ஏற்படுத்துமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ள ஆணையம் மையத்துக்குள் நடத்தை நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என தீவிரமாக கண்காணிககுமாறு பார்வையாளர்களை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தபால் வாக்குகளை முதலில் எண்ணப்பட வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |