முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோழியை சுட்டுக் கொன்ற 7 வயது சிறுமி

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பார்க், ஆக. 28 - தென் ஆப்பிரிக்காவில், தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருத்தி கோபத்தில் தனது சகதோழியைச் சுட்டுக் கொன்றுள்ளாள். இதனால் அச்சிறுமி மீதும், அவளது தாத்தா மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.

சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் ஆப்பிக்காவில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 95 ஆயிரம் பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால், முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களில் 30 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே. தென் ஆப்பிரிக்கா, பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒருநாள் அச்சிறுமி அங்குள்ள பண்ணையில் தனது 6 வயது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே பிரச்சினை உருவாகியுள்ளது.

பிரச்சினையினால் கோபமடைந்த சிறுமி, வீட்டிற்குள் சென்று தாத்தாவின் துப்பாக்கியை எடுத்து வந்து தனது தோழியைச் சுட்டிருக்கிறாள். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்திற்காக சிறுமியின் தாத்தா மீதும், அச்சிறுமி மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்