முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு: 58 பேர் பலி

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

பாக்தாத், செப். 18 - ஈராக் நாட்டில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 58 பேர் பலியாகினர். 

ஈராக் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புகள் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 58 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், 

ஈராக் தலைநகர் பாக்தாத் தெற்கே 95 கி.மீ. தூரத்தில் உள்ள ஹில்லா நகர் சந்தை பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அதனருகே மற்றொரு கார் குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். இஸ்காந்திரியா நகரில் கார் குண்டு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். 

பாக்தாத் மகாண சபை தலைவர் சென்ற காரிலும் குண்டு வெடித்தது. எனினும் காயங்கள் ஏதுமின்றி அவர் தப்பினார். தெற்கு பகுதிகளில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு வெடிப்புகளில் 8 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர். பாக்தாத்தின் வட கிழக்கு பகுதி அப்சயிதா பகுதியில் விவசாய நிலங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்