முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலியோ பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், அக். 9 - பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். 

பெஷாவர் மாவட்டத்தில் புறநகர் கிராம பகுதியான படாபேர் என்ற இடத்தில் தன்னார்வ தொண்டர்கள் போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. இது குறித்து போலீசார் கூறுகையில், போலீஸ் வாகனத்தை குறி வைத்து தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர் என்றனர். உலகில் அதிகபட்சமாக பாகிஸ்தானில் 2011 ம் ஆண்டில் 198 பேருக்கு போலியோ பாதிப்பு இருந்தது. விழிப்புணர்வு பிரச்சாரத்தால் கடந்த ஆண்டில் போலியோ பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக குறைக்கப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்