முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அருகே கார் தீப்பிடித்து 4 பேர் பலி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி, அக். 11 - பெங்களூர் சம்பங்கி நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மனைவி மகாலெட்சுமி. மகன் பிரசாத். மகள் தீபமாலா ஆகியோருடன் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். தரிசனம் முடிந்து காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சத்யநாராயணா ஓட்டி வந்தார். மனைவி,மகள் பின் இருக்கையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஓடிக் கொண்டிருந்த காரின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் சத்யநாராயணா நிலைதடுமாறி கார் சாலையோரம் இருந்த முள் பகுதிக்குள் பாய்ந்தது. சற்று நேரத்திற்குள் கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் அதே இடத்தில் கருகி பலியாயினர். காயத்துடன் ரோட்டில் கிடந்த பிரசாத்தை அக்கம்பக்கத்தில் இருந்தோர் மீட்டு பழமனேரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழமனேரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்