எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, அக். 17 - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் 3 வது சதியாளராக சேர்க்க வேண்டும் என்று நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் இதில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று எதிர்க்கட்சிகளும் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2005 ம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்களை முறைகேடான வகையில் ஒதுக்கீடு பெற்றதாக ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது தெரிந்ததே. மேலும் அவரது குழும நிறுவனமான ஹிண்டால்கோ மற்றும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக், பெயர் குறிப்பிடாத சில அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வு துறை(சி.பி.ஐ.) பதிவு செய்த 14 வது முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
1993 _ 2011 ம் ஆண்டு வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தை சி.பி.ஐ. கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. 1993 _ 2004, 2006_2009 ஆகிய காலக்கட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 13 முதல் தகவல் அறிக்கைகளை சி.பி.ஐ. பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிலதிபர் பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பிரதமர் மன்மோகன்சிங்கையும் ஒரு சதியாளராக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். தொடர்ந்து கூறிய அவர், நிலக்கரி துறை அமைச்சகத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுத்தார். ஆகவே அவரையும் ஒரு சதியாளராக, குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் சதி என்ற ஒன்று இருந்தால் அதில் பல பேர் இருக்கிறார்கள். முதலாவது சதியாளர் கே. எம். பிர்லா. மற்றொரு சதியாளர் நான். மூன்றாவது சதியாளர் என்றால் அது நிலக்கரி துறை அமைச்சராக இருந்த இப்போதைய பிரதமர்தான் என்று பரேக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்,
சதி என்று வந்தால் எல்லோருமே குற்றவாளிகள்தான் என்றும் ஒரு போடுபோட்டார். அப்படியானால் பிரதமரை முதல் சதியாளராக சேர்க்க வேண்டும் என்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, ஆமாம், கட்டாயமாக என்று கூறிய அவர், இதில் முடிவெடுத்தது அவரேதான். பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. அமைச்சராக இருந்த அவர்தான் இந்த முடிவு எடுத்தார் என்று பதிலளித்தார் பரேக். 3 பேர் இருக்கும் போது ஏன் என்னையும், பிர்லாவையும் மட்டும் சி.பி.ஐ. தேர்வு செய்தது. பிரதமரை ஏன் விட்டு விட்டது. இந்த விஷயத்தில் எல்லோருமே ஒரு அங்கம் என்றும் பி.சி. பரேக் குறிப்பிட்டார். நிலக்கரி அமைச்சத்தின் கீழ் வரும் ஆய்வு குழு முதலில் இந்த ஒதுக்கீட்டை நெய்வேலிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறியது. காரணம். அது பொதுத் துறை நிறுவனம் மட்டுமல்ல, தகுதிவாய்ந்த நிறுவனமும் கூட. ஆனால் அதற்கு ஒதுக்காமல் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க சொன்னார் பிர்லா. முதலில் விண்ணப்பித்தது அதுதான் என்று காரணமும் கூறினார் பிர்லா என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார் பி.சி. பரேக். பி.சி. பரேக்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று கூறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025