எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, அக். 17 - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் 3 வது சதியாளராக சேர்க்க வேண்டும் என்று நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் இதில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று எதிர்க்கட்சிகளும் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2005 ம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்களை முறைகேடான வகையில் ஒதுக்கீடு பெற்றதாக ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது தெரிந்ததே. மேலும் அவரது குழும நிறுவனமான ஹிண்டால்கோ மற்றும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக், பெயர் குறிப்பிடாத சில அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வு துறை(சி.பி.ஐ.) பதிவு செய்த 14 வது முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
1993 _ 2011 ம் ஆண்டு வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தை சி.பி.ஐ. கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. 1993 _ 2004, 2006_2009 ஆகிய காலக்கட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 13 முதல் தகவல் அறிக்கைகளை சி.பி.ஐ. பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிலதிபர் பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பிரதமர் மன்மோகன்சிங்கையும் ஒரு சதியாளராக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். தொடர்ந்து கூறிய அவர், நிலக்கரி துறை அமைச்சகத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுத்தார். ஆகவே அவரையும் ஒரு சதியாளராக, குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் சதி என்ற ஒன்று இருந்தால் அதில் பல பேர் இருக்கிறார்கள். முதலாவது சதியாளர் கே. எம். பிர்லா. மற்றொரு சதியாளர் நான். மூன்றாவது சதியாளர் என்றால் அது நிலக்கரி துறை அமைச்சராக இருந்த இப்போதைய பிரதமர்தான் என்று பரேக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில்,
சதி என்று வந்தால் எல்லோருமே குற்றவாளிகள்தான் என்றும் ஒரு போடுபோட்டார். அப்படியானால் பிரதமரை முதல் சதியாளராக சேர்க்க வேண்டும் என்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, ஆமாம், கட்டாயமாக என்று கூறிய அவர், இதில் முடிவெடுத்தது அவரேதான். பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. அமைச்சராக இருந்த அவர்தான் இந்த முடிவு எடுத்தார் என்று பதிலளித்தார் பரேக். 3 பேர் இருக்கும் போது ஏன் என்னையும், பிர்லாவையும் மட்டும் சி.பி.ஐ. தேர்வு செய்தது. பிரதமரை ஏன் விட்டு விட்டது. இந்த விஷயத்தில் எல்லோருமே ஒரு அங்கம் என்றும் பி.சி. பரேக் குறிப்பிட்டார். நிலக்கரி அமைச்சத்தின் கீழ் வரும் ஆய்வு குழு முதலில் இந்த ஒதுக்கீட்டை நெய்வேலிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறியது. காரணம். அது பொதுத் துறை நிறுவனம் மட்டுமல்ல, தகுதிவாய்ந்த நிறுவனமும் கூட. ஆனால் அதற்கு ஒதுக்காமல் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க சொன்னார் பிர்லா. முதலில் விண்ணப்பித்தது அதுதான் என்று காரணமும் கூறினார் பிர்லா என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார் பி.சி. பரேக். பி.சி. பரேக்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று கூறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரண்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
16 Oct 2025ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து?
16 Oct 2025திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
லைகா தொடர்ந்த வழக்கு: விஷால் பதிலளிக்க உத்தரவு
16 Oct 2025சென்னை: லைகா தொடர்ந்த வழக்கு விஷால் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
-
கிட்னி திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Oct 2025சென்னை: கிட்னி திருட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்க வேண்டும் என்று இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
-
ஆஸ்திரேலிய தொடர்: பயிற்சியை தொடங்கிய ரோகித், கோலி
16 Oct 2025மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய முன்னணி வீரர்கள் ரோகித் - விராட் கோலி அங்கு
-
செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருது அபிஷேக், மந்தனாவுக்கு அறிவிப்பு
16 Oct 2025துபாய்: செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருதை இந்தியாவின் அபிஷேக், மந்தனா வென்றுள்ளனர்.
அதிரடி ஆட்டக்காரர்...
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.