எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மே.13 - தமிழக சட்ட பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேற்று (மே 13) காலையிலிருந்தே தமிழகம் முழுவதும், அ.தி.மு.க. கூட்டணி முன்னிலை வகித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவின் இல்லம் இருந்த போயாஸ் கார்டன் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், மகளிர் அணியினர் திரண்டு நின்று ஜெயலலிதாவை வாழ்த்தி உற்காச கோஷம் எழுப்பி இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்இதன் விபரம் வருமாறு,
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா வீட்டு முன்பு நேற்று (மே 13) அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். காலை 9 மணி முதல் இனிப்புகள் வழங்கி தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்து விண்ணில் சென்று வெடித்து சிதறும் விலை உயர்ந்த பட்டாசு பாக்கெட்டுகள் எடுத்து வரப்பட்டு வெடிக்கப்பட்டன.
மகளிர் அணியினர் அம்மா வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்கிற கோஷங்களை எழுப்பியபடி குத்தாட்டம் போட்டனர். நேரம் செல்லச்செல்ல ஜெயலலிதா வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் மிகவும் திணறினார்கள். இந்த வெற்றி கொண்டாட்டத்தை இந்திய டி.வி. சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. போயஸ் கார்டனுக்கு வந்த அனைத்து தொண்டர்கள் கையில் இனிப்பு பட்டாசுகளுடன் வந்தார்கள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டு அருகே வசிக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டன.
மதியம் 12 மணி அளவில் ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களின் தலையாகவே காட்சி அளித்தது. அந்த தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தபடியே இருந்தனர். கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமா னதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டு முன்பு குவியத் தொடங்கினர். தேனாம் பேட்டை உதவி கமிஷனர் ரங்கராஜன் காலை 9.30 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார்.
அதனை தொடர்ந்து மயிலாப்nullர் துணை கமிஷனர் ராஜேந்திரன், தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், தென் சென்னை இணை கமிஷனர் பெரியய்யா, போக்குவரத்து இணை கமிஷனர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தனர். உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டிருந்தனர். வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில், மயிலாப்nullர் மாதவ பெருமாள் கோவில் ஆகியவற்றின் பிரசாதங்களை கோவில் குருக்கள் எடுத்து வந்திருந்தனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டுக்குள் எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வந்து ஜெயலலிதாவுக்கு nullச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெயலலிதா வீட்டு முன்பு கூட்டணி கட்சி தொண்டர்களும் திரண்டனர். அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தலைமை செயலகத்தின் பின்னணியில் ஜெயலலிதா இருப்பது போன்ற பிரமாண்ட பேனர் ஒன்றை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினார்.
திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பிலும் ஜெயலலிதா வீட்டு முன்பு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தை மீட்டெடுத்த தங்கத்தலைவியே, திரையரங்குகளை மீட்டு உதவி இயக்குனர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், வக்கீல் இன்பத்துரை, டாக்டர் வெங்கடேசன், நடிகர்கள் ஆனந்தராஜ், குண்டு கல்யாணம் ஆகியோரும் ஜெயலலிதா வீட்டில் திரண்டிருந்தனர். கவிஞர் வீரை கறீம், தலைமைக்கழக பேச்சாளர் சிட்கோ சீனு உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கினர். மயிலாப்nullரில் மயிலை ராஜேஷ்கண்ணா தலைமை யில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் மாணவர் அணி nullலகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மகாகவி பாரதிநகரில் முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஏ.என். சுப்பிரமணி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார். சின்னதம்பி, சக்திவேல் போட்டோ சேகர், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.