முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 40 பேர் சிறை பிடிப்பு

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், அக்.27 - இந்திய மீனவர்கள்40 பேரை பாகிஸ்தான் கடற்படையினர்  சிறை பிடித்துள்ளனர். இந்தியா_பாகிஸ்தானுக்கு இடையே உள்ள கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்ற  இந்திய மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். 

இந்திய கடல் எல்லைக்குள் வரும் பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர், இந்நிலையில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய. மீனவர்களின் படகுகளை கடற்படையினர் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தான் கடல் எல்லையில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த 40 இந்திய மீனவர்களை கைது செய்ததாகவும், இதில் வயதானவர்களும் உள்ளதாகவும்  பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்திய. மீனவர்கள் 50 பேர் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர், அதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 330 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்