முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்னேஸ்வரன் மருத்துவ மனையில் அனுமதி

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, நவ.1 - நெஞ்சு வலி காரணமாக, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு திடீரென  நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தமிழர்கள் மத்தியில் செய்தி பரவியது.  தமிழ் தேசிய கூட்டணி எம்.பி. அடைக்கலநாதன் இதை மறுத்துள்ளார். அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை.  அவர் ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்ததால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையைப் பொறுத்தவரை பயப்படும்படியாக எதுவும் இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் உள்ளஅமெரிக்காவுக்கான தூதர் மேக்கேல் சிசான் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு விக்னேஸ்வரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

               

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்