முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக இடிந்து 4 பேர் பலி

புதன்கிழமை, 20 நவம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், நவ. 21 _ தென் ஆப்பிரிக்காவில் வணிக வளாக கட்டிடம் இடிந்ததில் 4 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்தனர். இது பற்றிய விபரம் வருமாறு _ 

தென் ஆப்பிரிக்காவில் கடற்கதை நகரமான டக்டன் அருகே தோங்காட் என்ற இடம் உள்ளது. இங்கு வணிக வளாகம் (ஷாப்பிங் மால்) கட்டுமான பணி நடந்தது. 

ஆனால் அப்பணி முறைப்படி நகரசபை அனுமதியுடன் கட்டப்படவில்லை.  இதனால் நகராட்சி நடவடிக்கை எடுத்தது. எனவே கட்டுமானப் பணி பாதியிலேயே நின்றது. 

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதில் அதன் அடியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். 

தங்களைக் காப்பாற்றும்படி அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். 

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். 

இருந்தும் 4 பேர் பலியாகினர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இவர்கள் தவிர, மேலும் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே கிரேன் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சிக்கி இருப்பவர்களை கண்டு பிடித்து மீட்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு முகாமிட்டு மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கட்டிட உரிமையாளர் மற்றும் காண்டிராக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்