எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா, மே 19 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான ராயல் சேலன்ஜர்ஸ் அணியை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 63-வது போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் களமிறங்கின. டாசில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் பால் வல்தாட்டி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் துவக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர். அணியின் எண்ணிக்கை 25 ஐ எட்டியபோது அதிரடி வீரரும் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்துள்ளவருமான வல்தாட்டி 20 ரன்கள் எடுத்த நிலையில் லாங்வெல்த்தின் பந்துவீச்சில் திவாரியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து கில்கிறிஸ்ட் உடன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வாண வேடிக்கைகளை காட்ட ஆரம்பித்தது. அதிலும் கில்கிறிஸ்ட் பந்துகளை பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாற்றி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதனால் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். கில்கிறிஸ்ட் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். மேலும் இவரது அணி 10 ஓவர்களிலேயே 100 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் இருவரும் சேர்ந்து 51 பந்துகளில் 100 ரன்களை குவித்தனர். மார்ஷ் 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் 53 பந்துகளில் சதமடித்தார். இந்த சதம் இந்த தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். இதே தொடரில் கிறிஸ் கெய்ல் 46 பந்துகளில் சதம் கடந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கில்கிறிஸ்ட், மார்ஷ் இருவரும் 96 பந்துகளில் 200 ரன்களை சேர்த்தனர். துவக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கில்கிறிஸ்ட் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5 வது பந்தில்தான் அவுட்டானார். 55 பந்துகளில் 106 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், லாங்வெல்த்தின் பந்துவீச்சில் கிறிஸ்கெயிலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. மார்ஷ் 79 ரன்களுடனும், ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடித்த 232 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். தொடரில் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த 246 மற்றும் 240 ரன்களே ஐ.பி.எல்.லில் முதலிரண்டு அதிகபட்ச ஸ்கோர்களாகும்.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை ராயல் சேலன்ஜர்ஸ் அணி சேஸ் செய்தது. அந்த அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் திவாரி ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் இரண்டாவது ஓவரை ஹாரிஸ் வீசினார். அந்த ஓவரின் 3 வது பந்தில் கிறிஸ்கெய்ல் அதிர்ச்சியளிக்கும் வகையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. கடந்த 4 போட்டிகளில் அதிரடி காட்டி வந்த கெய்ல் இந்த போட்டியில் ஏமாற்றினார். அடுத்ததாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராட் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் 4 வது ஓவரின் முடிவில் ஹாரிஸின் பந்திலேயே கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ராயல் சேலன்ஜர்ஸ் அணி 4 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 34 ஐ எட்டியபோது ஸ்ரீவஸ்தவா வீசிய பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு துவக்க வீரர் திவாரி ஆட்டமிழந்தார். இவர் எடுத்த ரன்கள் 6 மட்டுமே. இவரைத் தொடர்ந்து யூசுப் பதான், டி வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். பதானும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. 7 ரன்களை மட்டுமே எடுத்த இவர் பால் வல்தாட்டியின் பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த ராயல் சேலன்ஜர்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பொறுப்பற்றதாய் இருந்தது. இதனால் அந்த அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடினார். ஆனால் இவரும் 34 ரன்களில் சாவ்லாவின் பந்தில் கில்கிறிஸ்ட்டால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனவுடன் ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டும் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் கனவு தகர்ந்தது. இறுதியில் ராயல் சேலன்ஜர்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. அரவிந்த் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் தரப்பில் சாவ்லா 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரீவஸ்தவா 2 விக்கெட்டுகளையும், வல்தாட்டி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவந்த ராயல் சேலன்ஜர்ஸ் 111 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக இதே ராயல் சேலன்ஜர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகப்பெரிய தோல்வியாகும்.
ஆட்டநாயகன் விருது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்டுக்கு கிடைத்தது. விருதுபெற்ற கில்கிறிஸ்ட் கூறுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான நேரத்தில் கிடைத்த மிகத் தேவையான வெற்றி என்று குறிப்பிட்டார். இந்த போட்டியின் மூலம் எங்கள் புள்ளிகள் உயர்ந்ததுடன் ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு மைதானம் சாதகமாக இருந்தது என்று தெரிவித்தார். இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன