முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல் வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி அறிவிப்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.9 - நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் அனுமதி பெறாமல் முதலீடு செய்திருந்தால் ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம்கோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது. 

மத்திய நிலக்கரி சுரங்கத்துறையை பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004_ம் ஆண்டு வரை வகித்து வந்தார். அப்போது நிலக்கரி சுரங்களில் கரி வெட்டி எடுப்பதற்கு உரிமங்கள் வழங்கப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிவித்தது. இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகக்கோரி பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதை ஏற்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இந்த ஊழல் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இது வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருவதோடு அதன் கண்காணிப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி லோதா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதி இல்லாமல் நிலக்கரி சுரங்கங்களில் முதலீடு செய்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தனர். அனுமதி பெறால் நிலக்கரி சுரங்க உரிமங்கள் பெற்றிருந்தாலும் அவைகளில் எவ்வளவு பெரிய தொகைக்கு முதலீடு செய்திருந்தாலும் அவைகள் ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் 3 பேரும் ஒருமித்த கருத்துடன் தெரிவித்தனர். அனுமதி இன்றி முதலீடு செய்த நிறுவனங்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்டம் அந்த நிறுவனங்களுக்கோ அல்லது நிறுவன உரிமையாளர்களுக்கோ எந்தவித உதவியும் செய்யாது என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். 

இதற்கிடையில் கடந்த 1993_ம் ஆண்டில் இருந்து 2004_ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சி.பி.ஐ. மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது. பி.எல்.ஏ. இன்டஸ்டிரீஸ், கேஸ்ட்ரான் டெக்னால்ஜி, கேஸ்ட்ரான் மைனிங் உள்பட பல நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் கொல்கத்தா, மும்பை, தானாபாத், நர்சிங்பூர் ஆகிய நகரங்களில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்