முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜெயக்குமார்- ப.தனபால் கட்சி பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு : ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 25 - சென்னை ராயபுரம் தொகுதி  அ.தி.மு.க. எம.எல்.ஏ. டி.ஜெயக்குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராசிபுரம் தொகுதி எம்.எல். ஏ.  ப.தனபால் ஆகிய இருவரும்  அ.தி.மு.க. கட்சி பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 14 வது சட்டமன்ற பேரவையின்  சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும்  ஜெயகுமாரும், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் தனபாலும் தங்களது கட்சி பணியை ராஜினாமா செய்து கடிதங்களை   கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு அணிப்பிவைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கட்சியின் தலைமை   ஜெயக்குமார் வகித்து வந்த கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், வட சென்னை மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுக்கப்டுகிறார் .அத்தோடு  தனபால்  நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்டுகிறார் என்றும்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார் என்று  தலைமை கழக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்