முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்: டோனி ராஜினாமா

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

தாகா, மார்ச் 30 - ஐபிஎல் 6-வது சிசன் தொடரில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட்டில் இந்ச வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுபிரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.

அந்த கமிட்டியின் அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளையும் 7-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் பரிந்துறை செய்தது. ஒரு சில் வீரர்கள் செய்த தவறால் ஒட்டு மொத்த அணிக்குத் தடை விதிப்பது சரியல்ல என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் டோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். சூதாட்ட வழக்கில் அவரது பெயரும் அடிப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்து உள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது குருநாத் மெய்யப்பன் குரித்து டோனி பொய்யான தகவலை முட்கல் கமிட்டியிடம் தெரிவித்ததாக பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மாவின் வக்கீல் ஹரீஸ் சால்வே குற்றம் சாட்டினார்.

இந்த தகவலால் தாகாவில் 20-20 கோப்பையில் விளையாடும் இந்திய அணி கேப்டன் டோனி அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் இந்தியா சிமென்டஸ் நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து விலக டோனி முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பவருமான சீனிவாசனிடம் போனில் டோனி  ஆலோசனை செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வலகுவதாக டோனி தெரிவித்திருக்கிறார். அதை சீனிவாசன் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.  இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில், அணி கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மேட்ச் முடிந்த பிறகும் வழக்கமாக பேசுவது போல் தான் டோனி என்னிடம் பேசினார் என்று மறுப்பு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்