முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20: நெதர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி

திங்கட்கிழமை, 31 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்டகாங்க், ஏப்.1 - டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் நடந்த இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நெதர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 16 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. 

ஆனால் அதற்கடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களே எடுத்ததால் 133 ரன்கள் மட்டுமே எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதிகபட்சமாக நெதர்லாந்தின் பேரஸி 48 ரன்கள் எடுத்தார், அவருக்கடுத்து மைபர்க் 39 ரன்கள் எடுத்தார். 

134 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் அனைவருமே ஏமாற்றம் அளித்தனர். நெதர்லாந்தின் பந்துவீச்சில் தடுமாறிய இங்கிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. 

அந்த அணியின் மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். முடிவாக 88 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நெத்ர்லாந்தின் சீலர் மற்றும் புக்ஹாரி இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருந்த இங்கிலாந்து அணி அனுபவம் இல்லாத நெதர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்த போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தை நெதர்லாந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்