முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது அருந்திய பயணி அத்துமீறல்: ஆஸி. விமானம் தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பாலி,ஏப்.26 - இந்தோனேஷியாவின் பாலி விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட செய்திகள் வெளியாகின.

தற்போது, விமானம் கடத்தப்பட்டு இந்தோனேஷியாவில் தரையிறக்கப்பட்டதாக வந்த தகவலை மறுத்துள்ள இந்தோனேசிய ராணுவம், "விமானி அரைக்குள் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் நுழைந்து அத்துமீறியதால், விமானம் அவசரமாக பாலி தீவில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக தவறான எச்சரிக்கை செய்தி வெளியாகி உள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்