முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை அணிக்கு முதல் வெற்றி

சனிக்கிழமை, 3 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே 4 - ஐ.பி.எல். லீக் போட்டி முதல் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகளில் நடந்தது. 2-வது கட்டமாக இந்தியாவில் நடக்கிறது. மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழத்தியது.

முதலில் பேட்டிங்க செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் 168 ரன்கள் எடுத்தது.. இதில் அதிகபட்சமாக சாஹா 59 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார், அவரோடு பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேகஸ்வெல் இந்த ஆட்டத்திலும் தனது அதிரடியை காட்டினார் ஆனாள் இவர் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி 169 ரன் என்ற இழக்கை விரட்டியது. 19.1 ஓழர்களிலேயே 170 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 39 ரன்களும், ஆண்டர்சன் 35 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் ரிஷி தவன் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

மும்பை அணி இந்த சிசனில் முதல் கட்டமாக நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி பெற்றிருந்தது குறிப்படித்தக்கது. ஆனாள் இந்தியாவில் மும்பையின் முதல் ஆட்டத்திலேயே வலுவான நிலையில் உள்ள பஞ்சாப் அணியை வீழத்தியுள்ளது. பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்