முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திக் விஜய் சிங் வீடு மீது சரமாரி கல்வீச்சு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

போபால், ஜூன்.- 7 - மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான திக் விஜய் சிங் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவ் குறித்து திக் விஜய் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார். ராம்தேவ் ஒரு மோசடி பேர்வழி. அவர் பலரை மோசடி செய்து சொத்து சேர்த்துள்ளார். தோடிக்கணக்கில் சொத்துவைத்துள்ள அவர் மீது மத்திய அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும். அதனோடு மட்டுமல்லாமல் ராம் தேவ் ஒரு கொள்ளைக்காரன் என்றும் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் திக்விஜய் சிங் வீடு மீது மர்மகும்பல் கற்களை வீசி தாக்கினர். அப்போது அவர்கள் ராம்தேவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது திக்விஜய்சிங் வீட்டில் யாரும் இல்லை. பாதுகாவலர்கள் மட்டுமே இருந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்வீச்சு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்