முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி கட்சி தேசிய தலைவராக முலாயாம் 8-வது முறையாக தேர்வு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஆக்ரா,மே.- 8 - சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் முதல்வர் முலாயாம் சிங் யாதவ் நேற்று மீண்டும் 8-வது முறையாக தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்தவர் முலாயாம் சிங் யாதவ். இவர், சமாஜ்வாடி கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலமுறை முதல்வராக பதவி வகித்தவர். தற்போது சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக 8-வது முறையாக தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தேசிய மாநாடு நேற்று ஆக்ராவில் நடைபெற்றது. அப்போது கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான ரியோதி ராமன் சிங், மோகன் சிங் உள்பட பலர் முன்மொழிந்தனர். வேறு தலைவர்களின் பெயர்கள் யாரும் முன்மொழியப்படாததால் முலாயாம் சிங் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரமும் முலாயாம் சிங்கிற்கு வழங்கப்பட்டது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முலாயாம் சிங் யாதவ் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களன் நம்பிக்கையை பெற நான் பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுவேன் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்