எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்15 - பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின்பு முதன்முதலாக நேற்றுமுன்தினம் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி கோரும் மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதை மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது என்றார். பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரிடம் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விபரம் அடங்கிய மனு ஒன்றையும் கொடுத்தேன். முதலில் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டும். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கூடுதலாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து நான் முதல்வராகிய சிறிது காலத்திற்குள் தமிழகத்தில் பழுதடைந்திருந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் பழுதுபார்க்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். அது குறித்து தீவிர பரிசீலனை செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். தமிழக கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்தினரால் பெரும் துயரத்திற்கு ஆளாகி அனாதையாக்கப்பட்டுள்ள தமிழர்களின் தற்போதைய உண்மையான வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தமிழர்கள் பகுதிக்கு சென்றுவர மத்திய அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை நீதிமன்றம் மீது மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்படி உள்ளது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரை பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வுகண்டு அணையில் கூடுதல் தண்ணீரை பெருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். சேதுசமுத்திர திட்டத்தில் அ.தி.மு.க. அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே பின்பற்றப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசுடன் சுமூகமான உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை நாங்கள் விரும்பவில்லை. மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு விரைவாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக தாமதத்தை தவிர்க்கவே ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலகம் மாற்றப்பட்டுள்ளது. செயல்படுகிற அரசு புதிய தலைமை செயலகத்தில் இயங்க முடியாது. தி.மு.க. செய்த சாதனையெல்லாம் நாட்டின் பணத்தை கொள்ளையடித்ததுதான். கடந்த ஆட்சியில் தி.மு.க.வினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை தி.மு.க. இப்போது கொடுத்துக்கொண்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இன்னும் தி.மு.க. நீடிப்பதால் தாம் சோனியா காந்தியை சந்திப்பது உசிதமாக இருக்காது என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை நீக்கிவிட்டு அ.தி.மு.க.வின் ஆதரவை கேட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ஜெயலலிதா சூசகமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. மேலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் தி.மு.க. இருக்கிறது. இந்தமாதிரியான சூழ்நிலையில் நான் சோனியா காந்தியை சந்திப்பது சரியாக இருக்காது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். என்னுடைய ஆதரவை யாராவது விரும்பினால் அவர்கள் என்னிடம் நேராக கேட்க வேண்டும். அவர்கள் சார்பாக நீங்கள் (நிருபர்கள்) கேட்கக்கூடாது என்றார். காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்குகிறீர்களா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு ஜெயலலிதா மேற்கண்டவாறு பதில் அளித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையொட்டி ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் -அ.தி.மு.க. இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
அன்னா ஹசாரே போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்து போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.
உங்கள் (ஜெயலலிதா) டெல்லி வருகை காரணமாக தி.மு.க. அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தி.மு.க. கவலை அடைந்திருப்பதாக நீங்கள்( நிருபர்கள்) கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். அணிமாற்றம் குறித்து முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றும் ஜெயலலிதா கூறினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடரப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசுதான். எனவே இதில் பழிவாங்கும் செயல் என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க.வுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்ததுபோல், உகாண்டாவின் இடி அமீன் ஆட்சியில் இருந்தது போல் மக்கள் உணர்ந்தனர் என்றும் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!