முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தளிநாதர் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை ஜூன்- 21 - சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் யோகபைரவர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சிவகாமி அம்பாள் உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 17ந் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு ஆகின. காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் உட்பட 95 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், காரைக்குடி எம்.எல்.ஏ வும் ஆன சோழன்.சித.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான பெரியகருப்பன் உள்ளிட்ட பலரும், பல்லாயிரகணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்