முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து மின்னணு ரசீது முறை - நடமாடும் சிக்னல் அமைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.29 -​ தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாடி​2 அண்ணா சாலை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் உடனடி அபராதங்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் திட்டத்தையும், எளிதில் எடுத்துச் செல்லத்தக்க சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையையும் நேற்று தொடங்கி வைத்தார்.

கையடக்கமான மின்னணு இரசீது வழங்கும் கருவி வழங்கும் திட்டம் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இக்கருவியின் மூலம் தொடர்ச்சியாக

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இந்த கையடக்க மின்னணு கருவியில் வாகன எண்ணை பதிவு செய்து மீறப்பட்ட போக்குவரத்து விதி, விதியை மீறிய இடம், அபராதத் தொகை, நேரம் மற்றும் தேதி ஆகிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இக்கருவியிலேயே வாகன ஓட்டிகளின் கையொப்பம் பெற்றபின் வெளிவரும் ரசீதைக் கொடுத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும். 

அடுத்த கட்டமாக கிரிடிட் கார்டு மூலம் அபராதம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இந்த கையடக்க மின்னணு கருவி சென்னை நகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த கருவியிலுள்ள தகவல்கள் அனைத்தும் சென்னை எழும்nullரில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை சர்வரில் பதிவு செய்யப்பட்டு கணினி திரைகள் மூலம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருவார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இக்கருவி மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும்.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் 20 எண்ணிக்கையில் 26 லட்சம் ரூபாய் செலவில் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் அமைக்கப்படாத இடங்களில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகள் பயன்படுத்தப்படும். இந்த சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி, மின்சாரம் இல்லாத பகுதிகளிலும், பாதுகாப்பு பணியின்போதும், அதிக வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த மின்னணு இரசீது வழங்கும் முறை திட்டத்தை தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மடிக்கணினி மூலம் தொடங்கி வைத்து, 10 போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு மின்னணு ரசீது வழங்கும் கருவிகளை வழங்கினார்.

இந்த எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரியசக்தியால் இயங்கும் போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவிகளை உபயோகப்படுத்துவதால் மின்சார இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்படும். மேலும், சூரிய ஒளி இல்லை என்றாலும் மின்சாரம் மூலம் இதை பயன்படுத்தலாம்.

சூரிய சக்தியால் இயங்கும் எளிதில் எடுத்துச் செல்லத்தக்க இந்த போக்குவரத்து செல்லும் திசைகாட்டும் கருவி முறையினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த இரு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஈ​2 காவல் நிலையத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பின்வரும் குறிப்பினை எழுதினார்.

“I am happy to launch the Electronic Challan System and the portable Traffic Signal System for the Chennai City Police today.

Technology plays an important role in administration. This technology driven initiative of the Chennai City Police will go a long way towards better enforcement of traffic rules. The utility of these systems depends on the persons who handle them. The Police, as Law Enforcement Agents, should always strive to fulfil the aspirations of the people by serving them effectively. The Police are the visual symbols of authority.

Therefore, your priority should be maintenance of Law and Order with a humane approach to the people whom you serve.”

பின்னர், அரியானாவில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை தடகளப் போட்டியில் 10,000 மீட்டர் மற்றும் 5,000 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்ற எப்​2, எழும்nullர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ரகுநாத்துக்கு ரூபாய் 1 இலட்சம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெள்ளி வென்ற சென்னை புற நகர ஆயுதப் படை பெண் காவலர் டி. தமிழரசிக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப் பரிசும், 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற திருச்சி​தமிழ்நாடு சிறப்பு காவல் 1-வது அணி காவலர் ஆர். வீரமணிக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் வெண்கலம் வென்ற சென்னை கமாண்டோ படை பெண் காவலர் பாப்பாத்திக்கு ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப் பரிசும், போல் வால்ட் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி​தமிழ்நாடு சிறப்பு காவல் 1வது அணி முதுநிலை காவலர் எம். முகேஷுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற சென்னை ஆயுதப்படை பெண்

காவலர் கிருஷ்ணரேகாவுக்கு ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பரிசும், மொத்தம் ரூபாய் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசினை,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் காவல் துறை உயரதிகாரிகள் டிஜிபி ராமானுஜம், கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைகண்ணன், இணை  ஆணையர்கள் செந்தாமரை கண்ணன், சங்கர், சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெறும் அண்ணா சாலையில் பொதுமக்கள் இடையூறு ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. எளிய முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுயர பேனர்கள் எதுவும் இல்லை.

முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வர்ணணை செய்த பெண் காவலரின் வர்ணனை சிறப்பாக இருப்பதை கவனித்த முதல்வர் போகும்போது ஓரமாக நின்றிருந்த பெண் காவலர் கோமதியை அழைத்து நன்றி கூறிவிட்டு சென்றார்.

நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் திரிபாதி மின்னணு எந்திரம் எழும்பூரிலுள்ள கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்வது பதிவாகிவிடும். இதன் மூலம் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்