எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 8 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார். கடந்த 2008-ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு கூறியிருந்தது. இதை அடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக புகார்கள் எழுந்தன.
இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது 2006 ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்ட சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனமும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிய காலத்தில் ஒதுக்கீடு தராமல் அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் இழுத்தடித்து காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள தனது நண்பர் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக தயாநிதி மாறன் செயல்பட்டார் என்றும் ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்காகவே ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுக்காமல் தயாநிதி மாறன் காலதாமதம் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
2008 ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மட்டுமல்லாமல் அதற்கு முன்பு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு மத்திய புலனாய்வுத்துறை நிறுவனமான சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் 2006 ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏர்செல் நிறுவனத்திற்கு தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்காமல் இழுத்தடித்தார் என்பதை சி.பி.ஐ. தனது விசாரணையில் கண்டறிந்தது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்காகவே வேண்டும் என்றே ஏர்செல் நிறுவனத்திற்கு 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை தயாநிதி மாறன் வழங்காமல் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் எனவே இந்த விவகாரத்தில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளிதான் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேற்கண்ட அறிக்கையில் தயாநிதி மாறனை குற்றம்சாட்டியுள்ளதை அடுத்து தயாநிதி மாறன் தனது ஜவுளித் துறை அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவரது வீட்டில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தயாநிதி மாறன் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
மத்திய மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒலி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இந்த தகவலை தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதிமாறனின் ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு அதுகுறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், தயாநிதிமாறனும் இதுகுறித்து பிரச்சனை எழுப்பவில்லை என்றும் மற்றவர்களும் இதுகுறித்து பேசவில்லை என்றும் அம்பிகா சோனி குறிப்பிட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதலில் ஆ.ராசா, அதற்கு அடுத்து கனிமொழி ஆகியோர் தலைகள் உருண்ட நிலையில் இப்போது தி.மு.க.வில் மூன்றாவதாக தயாநிதிமாறனின் தலையும் உருண்டுள்ளது. தயாநிதிமாறனை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி.மு.க. மேலிடம் நேற்று முன்தினமே சம்மதித்துவிட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை தயாநிதிமாறன் ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு நியமிக்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
முன்னதாக அமைச்சரவை கூட்டத்திற்கு சென்ற தயாநிதிமாறன், அங்கு தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரிடம் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.