முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எகிப்தில் போராட்டம்

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

கெய்ரோ,ஜூலை.- 9 - அதிபருக்கு எதிரான கிளர்ச்சியின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எகிப்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. 30 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் அதிபராக இருந்த முபாரக் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதிபர் முபாரக் கிளர்ச்சியாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். இதில் 850 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் முபாரக், கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார். முகமது உசேன் தலைமையிலான ராணுவ அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களை கொன்ற வழக்கில் 7 போலீசாரை சூயஸ் நகர நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் கிளர்ச்சியின் போது பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹோஸ்னி முபாரக் பதவி விலகி 5 மாதங்களுக்கு பின் எகிப்தில் மீண்டும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்