முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பீதியை ஏற்படுத்திய பை

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.23 - தலைநகர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அப்பால் ஒரு பை அனாதையாக நீண்ட நேரம் கிடந்தது. இதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அந்த வழியாக சென்றவர்கள் அந்த பையை எடுத்து பார்க்காமல் சென்றனர். இதுகுறித்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்தோ அல்லது வேறு நபர்களிடம் இருந்தோ நேற்றுக்காலை சரியாக 12.50 மணி அளவில் தகவல் வந்தது. இதனையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பையை முதலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். அப்போது உள்ளே வெடிமருந்து பொருளோ அல்லது வெடிகுண்டோ இருக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பையை போலீசார் அப்புறப்படுத்திவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்