எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மார்ச்.3 - மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் உயிரை கொடுத்தாவது பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை முதல்வராக்கியே தீருவோம் என்றார்.
மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோட்டில் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் இளங்கோவன், மேலூர் தொகுதி செயலாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் தர்மராஜ், உசிலம்பட்டி தொகுதி செயலாளர் நீதிபதி, திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பி. பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளரும், மதுரை, விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம். முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தீர்மானத்தை விளக்கி மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இங்கு பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது. 6 தொகுதிகளை சேர்ந்த 6 ஏழை குடும்பங்களுக்கு பசுவும், கன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 24 ம் தேதியே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விட்டது..
இந்த கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்த போது புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முதல் முதலாக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மாணவரணி சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சி குண்டர்களை விரட்ட படை தளபதிகளாக, சிப்பாய்களாக மாணவரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தி.மு.க. ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி சாய்க்க மாணவரணி சூளுரைக்க வேண்டும். எங்கள் உயிரை கொடுத்தாவது ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்தியே தீருவோம்.
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் மாணவரணியின் புறநகர் மாவட்ட செயலாளராக மாணிக்கத்தை நியமித்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பு கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. விட்டு விட்டு கரண்டை தரும் இருட்டு ஆட்சியை அகற்றிட அதி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மாணவரணியினர் வரும் தேர்தலில் கடுமையாக வேலை பார்க்க வேண்டும். ஓட்டு சாவடிகளில் மாணவரணியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை சந்தித்து ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்து சொல்லி அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டளிக்க செய்ய வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் மாணவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதா மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை செய்துள்ளார். இலவச பாடநூல், இலவச சைக்கிள் என மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாணவர்கள் விரோத அரசாகத்தான் உள்ளது. இந்த அரசை தூக்கி வீச மாணவரணியினர் சபதமேற்று இன்று முதலே உழைக்கத் தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஏப்ரல் 13 ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நிரந்தரமாக தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட இன்று முதல் ஊன் உறக்கம் பாராது இரவு பகல் பாராது அயராதுபாடுபட்டு வெற்றி சரித்திரம் படைத்திட கழக மாணவரணி புறநகர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் சூளுரை ஏற்கிறது.
வரும் தேர்தலில் தி.மு.க.வினர் செய்யும் அனைத்து தில்லுமுல்லுகளையும் முறியடித்து ஜெயலலிதாவின் சாதனைகளையும் தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் அவலங்களையும் மற்றும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தெருத்தெருவாக வீதி வீதியாக சென்று மக்களுக்கு எடுத்து கூறி மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க அயராது பாடுபடுவோம்.
தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல் நாடாளுமன்றத்திற்கு செல்ல அஞ்சப்படுகிற மு.க. அழகிரியை இந்த தேர்தலில் மதுரையை விட்டு அப்புறப்படுத்திட இந்த கூட்டம் சூளூரை ஏற்கிறது.
மாணவர்களின் நலனுக்காக ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற திட்டங்களை தீட்டி மாணவர்களின் வாழ்வு மேண்மையடைய செய்தும். தற்போது மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் அனைத்துசெயல்களை தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி எப்போதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் மாணவர்களின் காவல் தெய்வம் ஜெயலலிதாவுக்குஇந்தகூட்டம் கோடானுகோடி நன்றியை தெரிவித்துகொள்கிறது.
வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவால் அடையாளம்காட்டும்வேட்பாளர்களை இரவு பகல் பாராது அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்து வெற்றி கனியை ஜெயலலிதாவின் மலர் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவம்,முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சி. துரைராஜ், எம்.எல்.ஏக்கள் மேலூர் சாமி, ஏ.கே.போஸ், ஐ. மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம். ஜெயராமன், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் க. தவசி, முன்னாள் அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் சிவராமகிருஷ்ணா, மாணவரணி இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி துணை செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் முனியசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரவீண்குமார், மாணவரணி துணை தலைவர் மகேந்திரபாண்டி, மாணவரணி இணை செயலாளர் கே.பி. பூமிநாதன், மாணவரணி துணை தலைவர்ஆர். கார்த்திக், கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
13 May 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.