முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.5 - சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி தரம் இல்லாமல் இருக்கிறது. மாணவர்களுக்கு சமச்சீர் கல்விப்பாடத்தை இந்தாண்டு நிறுத்திவைக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு, சமச்சீர் கல்வி புத்தகங்களை மாணவர்களுக்கு ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பின்னர் இதை ஆகஸ்டு 5-ம் தேதி வரைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் சமச்சீர் கல்வி அப்பீல்  மனு தொடர்பான 6 நாட்கள் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. சமச்சீர் கல்வி புத்தகங்களை விநியோகிக்க காலக்கெடு வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்கப்பயாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்