முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

விருதுநகர், ஆக.7 - நமக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் ஆகையால் நாம் கண் கலங்கக் கூடாது என சிவகாசி வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி,  பலியானவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் கூறினார். 

இதுபற்றிய விபரம் வருமாறு:- விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம், புதுக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு சென்று சிவகாசி வெடிவிபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கினார்.

அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் உடன் சென்றனர்.

காசோலையினை வழங்கிய அமைச்சர்,  பலியானவர்களின் குடும்பத்தினரிடம் பட்டாசு வெடிவிபத்தில் தொழிலாளர்கள் இறந்ததை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை தனது குடும்பம் என நினைத்து ஒவ்வொரு ஏழை, எளிய மக்களின் கண்ணீரின் வேதனையையும் உட்கொள்கிறார். என்றும் உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார். உங்களுக்காக என்ன செய்யவேண்டுமோ அதை அல்லும் பகலும் அயராது உழைத்து, உணவு, உறக்கமின்றி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அவரது உத்தரவின்பேரில் நாங்களும் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க காத்திருக்கிறோம். எனவே நமக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். நாம் கண்கலங்கக் கூடாது  என ஆறுதல் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்