எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை ஆக-10 - நெல்லை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறைக்கு புகார் கொடுத்த தொலைநெறி தொடர்கல்வி இயக்குனருக்கு கொலைமிரட்டல் விடுத்துவரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகேயுள்ள அபிஷேகபட்டியில் அமைந்துள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பி.எட். பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. தொலைநெறி கல்வியில் பி.எட். படிப்பிற்கான வசதி ஒரு சில பல்கலைக்கழத்தில் மட்டுமே உள்ளதால் இந்த படிப்பில் சேர ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பி.எட். படிப்பில் சேர மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 2010-11ம் ஆண்டு பி.எட்.படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்குவதிலேயே முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் விண்ணப்பங்கள் வழங்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வந்த சபாபதி மோகன் பி.எட்.பிடிப்பிற்கு விண்ணப்பித்திருந்த 200க்கு மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புற்பாக பி.எட். சீட் வழங்குமாறு பரிந்துரை செய்ததால் அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக சீட் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவிவந்த சூழலில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி துறை இயக்குனராக ஆர்.ரமேஷ் கடந்த 1.7.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தொலைநெறி தொடர் கல்வி இயக்கத்தில் பி.எட்.சீட் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்து ஆதாரப்பூர்வமாக உயர்கல்வித்துறைக்கு புகார் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை இயக்குனரகம் நெல்லை பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி சென்றது. இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்த தொலைநெறி தொடர் கல்வி இயக்குனர் ரமேஷை மர்ம நபர்கள் சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தால் கொலைசெய்வதாக மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவை நேற்று மாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். இச்சம்பவம் நெல்லையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.


