முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்டவாளத்தில் விரிசல் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தப்பியது

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், ஆக.12 - திருமங்கலம் அருகே விரிசல் விட்ட தண்டவாளப்பகுதியை கடந்து சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திலிருந்து தப்பியது. நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும்பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் கடந்து சென்றுள்ளது. அப்போது வழக்கத்திற்கு மாறாக ரயில் என்ஜினில் பலத்த அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த ரயில் என்ஜின் டிரைவர் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் அது குறித்து புகார் செய்து விட்டு ரயிலை கிளப்பி சென்றார். இதையடுத்து சிவரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்ட போது ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மரக்கட்டைகள் மற்றும் கிளாம்புகள் கொண்டு விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விரிசல் விட்ட பகுதியில் ரயில்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்