முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் பொறுப்புடன் விளையாட வில்லை: பாய்காட்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 14 - இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் கள் பொறுப்புடன் விளையாடவில்லை என்று இங்கிலாந்து அணியி ன் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட் கண்டனம் தெரிவித்து இருக் கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொட ர் நடந்து வருகிறது. இதல் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர் ணனையாளருமான ஜெப்ரி பாய்காட் இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது - 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பொறுப்பு டன் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டி என்பது கடும் சவால் நிறைந்தது. இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் துடிப்புடன் விளையாட வில்லை. 

இந்திய அணியை பார்க்கும் போது, சராசரி அணியாக தான் திகழ்கிற து. இந்திய அணியை எந்த விதத்திலும் அங்கீகரிக்க இயலாது. 2 டெஸ் டில் ஏற்பட்ட தோல்வியால் இந்தியா காயத்தில் உள்ளது. 

3 -வது டெஸ்டிலும் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியா து. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மிகவும் ஆக்ரோசமாக விளையாடி வருகிறது. 

தொழில் முறையில் சிறப்பாக விளையாடுகிறார்கள். அனைத்து வீரர் களும் முழு திறமையுடன் ஆடுகிறார்கள். இவ்வாறு ஜெப்ரி பாய்கா  ட் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது - அலிஸ்டார் குக்கின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 -வது டெஸ்டிலும் தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜாஹிர்கான் காயம் காரணமாக விளையாடாதது பந்து வீச்சில் பாதி ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு மாற்றாக சிறந்த பெளலரை உரு வாக்குவது மிகுவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்