எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் -7 - இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி வெற்றிபெற்றது. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுக்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி சந்தித்தது. இங்கிலாந்து அணி கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஸ்ட்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஸ்ட்ராஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்திலேயே கெவின் பீட்டர்சனும் 2 ரன் எடுத்த நிலையில் ஜாக் காலிசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டாக 3 ரன்களில் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஜோனாதன் ட்ராட் மற்றும் இயான் பெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இதிலும் பெல்லை மிகச் சிறப்பான முறையில் காட் அண்டு போல்டு முறையில் ஆட்டமிழக்கச்செய்தார் பீட்டர்சன். பெல் எடுத்த ரன்கள் 5 மட்டுமே. 15 ரன்களை எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இந்நிலையில் ட்ராட்டுடன் ஜோடி சேர்ந்த ரவி பொப்பாரா இங்கிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 87 பந்துகளில் அரைசதம் கடந்தார் ட்ராட். அணியின் எண்ணிக்கை 114 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ட்ராட் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ப்ரையர், ரவிபொப்பாராவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் பொப்பாரா 87 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். அணியின் எண்ணிக்கை 134 க்கு உயர்ந்தபோது 10 ரன்களை அடித்திருந்த ப்ரையர், வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலின் பந்தில் கீப்பர் வான்விக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இங்கிலாந்து அணியின் மொத்த ரன்கள் 148 ஐ எட்டியபோது 60 ரன்கள் அடித்திருந்த பொப்பாரா, மோர்கெலின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 45.4 ஓவர்களில் 171 ரன்களையே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மோர்கெல் 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
172 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆம்லா மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 63 ஐ எட்டியபோது 22 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், சுழல்பந்து வீச்சாளர் ஸ்வானின் பந்தில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆம்லாவை கிளீன்போல்டாக்கினார் ஸ்டூவர்ட் பிராட். ஆம்லா எடுத்த ரன்கள் 42. அடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 82 க்கு உயர்ந்தபோது 15 ரன்களை எடுத்திருந்த காலிஸ், ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். இதன் பிறகு தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிவிலியர்ஸ் மற்றும் ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர் ரன் சேர்க்க திணற ஆரம்பித்தனர். 25 ரன்களில் 100 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 7 ஓவர்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் அதற்குள் மேலும் ஒரு விக்கெட்டையும் இழந்தது. 25 ரன்களை எடுத்திருந்த வில்லியர்ஸ், ஆண்டர்சனின் வேகத்தில் வீழ்ந்தார். இதே ஸ்கோரிலேயே ப்ளெஸ்ஸிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து டுமினி ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆண்டர்சனின் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. எளிய ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா எட்டுமா என்ற கேள்வி எழுந்துவிட்டது. அணியின் எண்ணிக்கை 127 ஆனபோது பீட்டர்சன் 16 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் யார்டி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வான்விக்குடன் ஜோடி சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அணியின் எண்ணிக்கை 160 ஐ எட்டியபோது 37 பந்துகளில் 13 ரன்களை எடுத்திருந்த வான்விக் விக்கெட்டை பறித்தார் வேகப்பந்து வீச்சாளர் ப்ரேஸ்னன். அடுத்து 4 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி ஸ்டெயினின் விக்கெட்டையும் இழந்தது. ஸ்டெயின் 20 ரன்களை எடுத்த நிலையில் ப்ராடின் பந்தில் விக்கெட் முன் கால் என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மோர்னே மோர்கெல் 1 ரன் எடுத்த நிலையில் ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களை மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான்தாஹிர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மிகச் சிறப்பாக பந்துவீசி 6.4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், யார்டி, ப்ரேஸ்னன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இங்கிலாந்து அணி பலம்பொருந்திய அணியாக கணிக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி பி பிரிவில் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.