எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 7 - கூட்டணி பிரச்சினையில் காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் தி.மு.க.வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து காங்கிரஸ் தரப்பில் யாரும் பேச வரவில்லை என்று டி.ஆர்.பாலு விரக்தியுடன் கூறினார். காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கியது. கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒதுக்கீட்டு கணக்கின்படி காங்கிரசுக்கு 51 இடங்களே ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரை கொண்ட ஐவர் குழுவினர் சட்டப்பேரவை தேர்தலில் 90 தொகுதிகள் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
ஆனால் தி.மு.க. தரப்பில் கடந்த முறை 48 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். தற்போது 51 தொகுதிகள் தருகிறோம் என்று கூறினர். பின்னர் இந்த எண்ணிக்கை 53 ஆகி பின்னர் 55 ஆகி, 58-ல் வந்து நின்றது. இரு முறை இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு முடியாததால் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கருணாநிதியிடம் பேசி விட்டு சென்றார். அப்போது 60 தொகுதிகள் என்று முடிவாகியது. அதன் பிறகும் காங்கிரஸ்- தி.மு.க. உடன்பாட்டில் சிக்கல் நீடித்தது. (இந்நிலையில்தான் காங்கிரசை அலட்சியப்படுத்திவிட்டு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. இது காங்கிரசை மேலும் கோபமடைய செய்தது.) இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த காங்கிரஸ் தரப்பினர் பின்னர் டெல்லியிலிருந்து 60 சீட்டை 63 ஆக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தனர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியே 4-ந் தேதி இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விரக்தியுடன் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் குறிப்பிடும் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. தரப்பில் அதன் தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க தி.மு.க. உயர்நிலை மட்ட குழு கூட்டத்தை சென்னையில் 5-ந்தேதி கூட்டினர். அதில் மத்திய அரசிடமிருந்து தி.மு.க. மந்திரிகள் விலகுவதாகவும், வெளியிலிருந்து பிரச்சினையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து எந்த தகவலும் தி.மு.க.விற்கு வரவில்லை. அதோடு தி.மு.க.வின் இந்த மிரட்டலை காங்கிரசார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று தி.மு.க. அலுவலகத்திற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நாளை (இன்று) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் அளிப்பார்கள். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதுகுறித்து டெல்லியில் இருந்தும் இது வரை யாரும் பேச வரவில்லை என்றார்.
நேற்று காலை தி.மு.க. தேர்தல் குழுவினருடன் பா.ம.க. தலைவர் கோ.க.மணி தலைமையில் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பா.ம.க. தி.மு.க. அணியில் சேர்ந்து போட்டியிடும் 31 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் வழங்கினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த பா.ம.க. தலைவர் கோ.க.மணி கூறுகையில், காங்கிரஸ் அல்லாமல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
முன்னதாக தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினார்கள். அறிவாலயத்தில் கூடியிருந்த தி.மு.க.வினர் காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தி.மு.க. தொண்டர்கள் தொடர்நது கோஷமிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.