எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, செப்.- 28 - சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டிரினிடாட் டொபாக்கோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி -20 கிரிக்கெட் போட்டியில் உலகின் 10 முன்னணி அணிகள் கோப்பையை வெல்ல களமிறங்கியுள்ளன. இதில் தனது முதல் லீக் போட்டியில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த டிரினிடாட் டொபாக்கோ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற டிரினிடாட் கேப்டன் டேரன் கங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் அட்ரியன் பரத் ஆகியோர் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 21 க்கு உயர்ந்தபோது 11 ரன்கள் எடுத்திருந்த பரத், வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் பந்தில் போல்டானார். இதையடுத்து ப்ராவோ களமிறங்கினார். இவரும் அதிரடியை காட்டினார். அணியின் எண்ணிக்கை 41 க்கு உயர்ந்தநிலையில், 21 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் கங்கா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ப்ரான்க்ளின் பந்தில் சதீஷால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஸ்கோரிலேயே விக்கெட் கீப்பர் ராம்தின் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவராலேயே பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் 57 ரன்களை எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்தது டிரினிடாட் அணி. இதனை அடுத்து டிரினிடாட் அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஹர்பஜன் மற்றும் மலிங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசினர். இதனால் டிரினிடாட் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களை மட்டுமே எடுத்தது. டிரினிடாட் தரப்பில் அஹமது எடுத்த 23 ரன்களே அதிகபட்சமாகும். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டுகளையும், அஹமது, பொல்லார்ட்டு, பிராங்ளின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். ஆனால் டிரினிடாட் அணியின் ராம்பாலின் அதிரடியான பந்துவீச்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுமன்-10, பிராங்க்ளின் -0 , சைமண்ட்ஸ் -0 என்று ஆகியோர் அவுட்டானார்கள். துவக்க வீரர் பிளிஜார்டின் விக்கெட்டை பத்ரி எடுக்க, 16 ரன்களை எடுப்பதற்குள் மும்பை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ராயுடுவுடன் ஜோடிசேர்ந்த அதிரடி வீரர் பொல்லார்டும் 9 ரன்களை மட்டும் எடுத்து நரைன் பந்தில் போல்டானார். இதனால் மும்பை அணியின் வெற்றி கேள்விக்குறியானது. மிக எளிய இலக்கை கடின இலக்காக்கி மும்பை அணி தத்தளித்தது. டிரினிடாட் டொபாக்கோ அணியின் பந்துவீச்சும் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு முறை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கைகொடுக்க மும்பை அணி வெற்றி இலக்கை மிக மெதுவாக நெருங்கியது. அணியின் எண்ணிக்கை 96 ஐ எட்டியபோது 8 வது விக்கெட்டாக மலிங்கா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 47 பந்துகளில் 36 ரன்களை எடுத்திருந்த ராயுடு மும்பை அணி 97 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் களமிறங்கிய சாஹால் அந்த பந்தை தட்டிவிட்டு மிக வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்தார். அதற்குள் பந்து பீல்டரை எட்டிவிட சாஹால் மிக வேகமாக இரண்டாவது ரன்னிற்கு ஓடினார். அதற்குள் பந்து கீப்பர் ராம்தின் கைக்கு கிடைத்தது. ஆனால் கீப்பர் பந்தை ஸ்டெம்பை குறிவைத்து அடிக்காததால் சாஹால் அந்த ரன்னையும் பூர்த்தி செய்தார். இதனால் கடைசி பந்தில் மும்பை இண்டியன் த்ரில் வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக ரவி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன்சிங் இந்த போட்டியில் வெற்றிபெற அனைத்து தகுதிகளும் நிறைந்த அணி டிரினிடாட் டொபாக்கோதான் என்றார். தங்களது அணி வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடியதாக தெரிவித்த அவர், பேட்டிங் இவ்வளவு மோசமாக இருந்தால் அரையிறுதியை எட்டுவது கடினம் என்றும் தெரிவித்தர்.
போட்டி முடிவு குறித்து கருத்து தெரிவித்த டிரினிடாட் டொபாக்கோ அணி கேப்டன் டேரன் கங்கா, தங்களது அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் எதிரணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது என்றும் கடைசியில் கீப்பர் ராம்தின் முடிவை மாற்றிவிட்டார் என்றும் ஆனால் ஆட்டத்தில் இதுவெல்லாம் சகஜம் என்றும் தெரிவித்தார்.
மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.