முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்பளிப்பு பெறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் கலெக்டர் உத்தரவு

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, அக். - 10 - தேர்தலின் போது மதுபாட்டில்கள், அன்பளிப்பு பெறுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலூர் ஒன்றிய பகுதிகளான நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் சகாயம் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் காவல் துறையினரிடம் கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் வாக்களிப்பதற்காக யாரும் விருந்து வைத்தாலோ, மது பாட்டில்களோ, வேறு வகையான அன்பளிப்புகளோ வழங்கினால் அவற்றை வழங்கியவர் மீதும், வாங்கியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஊமச்சிகுளத்தில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் வழியில் கொடியுடன் சென்ற வாகனம் ஒன்றையும், சர்வேயர் காலனியில் செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி சென்றவரையும் மாவட்ட கலெக்டர் நிறுத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்