முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் முறியடிப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, நவ.11 - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாலகொட்டே என்ற இடத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் நள்ளிரவு நேரத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ எத்தனித்தனர். அவர்களை அந்த பகுதியில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அவர்களை சரணடையுமாறு இந்திய ராணுவத்தினர் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் இந்திய துருப்புகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதிக்குள்ளேயே தப்பியோடிவிட்டனர்.  இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்