முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகை நிருபர் தாக்கப்பட்ட வழக்கில் பொட்டு சுரேஷ் மீண்டும் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, நவ.13- பத்திரிகை நிருபர் தாக்கப்பட்ட வழக்கில் பொட்டு சுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டு உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரை தி.மு.க. முக்கிய புள்ளிகளில் ஒருவரான பொட்டு சுரேஷ் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தாடையம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் ஒரு வாரப் பத்திரிகையின் நிருபர். கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொட்டு சுரேஷ் பற்றிய செய்தி வெளியிடுவதை தடுக்கும் நோக்கத்தில் தனக்கு பொட்டு சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக பாண்டி, போலீஸ் சுப்பிரண்ட் அஸ்ரா கார்க்கிடம் கடந்த அக்டோபர் மாதம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து எழுமலை போலீசார் பொட்டு சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கு உசிலம்பட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து பொட்டு சுரேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் போலீசார் பொட்டு சுரேஷை மீண்டும் கைது செய்தனர்.  நேற்று காலை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொட்டு சுரேஷ் பலத்த பாதுகாப்புடன் உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி, பொட்டு சுரேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் பலத்த பாதுகாப்புடன் பொட்டு சுரேஷ் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்