முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் போராட்டக் குழுவினர் மக்களிடம் இருந்து வசூல் செய்யும் தொகை நாராயணசாமி புதிய கேள்வி

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

பழனி, நவ.14- பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது உறுதி என்று பழனியில் மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். மேலும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யும் தொகை பற்றி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  பழனி முருகன் மலைக்கோவிலில் மத்திய மந்திரி நாராயணசாமி, சுவாமி  தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்ளிடம் கூறியதாவது:-

கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக பிரதமரின் அறிவுரைப்படி தமிழக முதல்வரை சந்தித்தோம். தொடர்ந்து விஞ்ஞானிகள் குழுவும், போராட்டக் குழுவும் திருநெல்வேலியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்குழுவினர் வல்லுனர் குழுவினரிடம் 6 கேள்விகள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் தயாரிக்கும் பணியில் வல்லுனர் குழு ஈடுபட்டுள்ளது.  கூடங்குளம் அணுமின் நிலையம் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. நான் அப்படி பேசியதாக திரித்து கூறப்பட்டுள்ளது. போராட்டக்குழுவினர் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்யும் தொகை குறித்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். தவறான பிரசாரத்தை கைவிட வேண்டும். கடந்த பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் ஊழலைத் தடுக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்