எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.15 - சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய கலெக்டர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. 43 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதலே ஓய்வூதியம், மீனவர் நலன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் போன்ற திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கு கொள்ளும் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10 வது மாடியில் மாநாட்டை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் தொடக்க உரையாற்றுகையில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
நேற்று 2 வது நாளாக மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காலை 10 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வருகை தந்தார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் நுழைவு வாயிலில் நின்று தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். 10 வது மாடிக்கு சென்ற அவரை ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 32 மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், வி.ஜி.பி.ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கலெக்டர்கள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் தனது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:-
2 நாட்களாக உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் பல கருத்துக்களை சொன்னீர்கள். உங்களது பணிச் சூழல் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
1991-ம் ஆண்டில் இருந்து நிர்வாகம் எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதிகாரிகள் பாரபட்சமின்மை, மனசாட்சி, இரக்கம் ஆகிய 3 நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். பல மாவட்ட ஆட்சியாளர்கள் மாவட்டங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். மாவட்ட ஆட்சியாளர்கள் தான் நிர்வாகத்தின் உறுதித்தன்மை வாய்ந்த வலுவான இரும்பு போன்ற அடிப்படையாக திகழ்கின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அது சமூகமான முறையில் நிகழ அதிகாரிகளின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம் ஆகும். சில வேளைகளில் எதிர்பாராத வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டது உண்டு. இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாதவாறு எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். நல்லாட்சிக்கு இலக்கணம் எது என்றால் வலுவான கட்டமைப்புதான். மாவட்ட ஆட்சித் தலைவர்களின் செயல்பாட்டின் மீது தான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இப்போது எல்லாம் மாவட்டத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது நமது கடைமை ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வேளாண்மைக்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விவசாயத்திற்கு இடுபொருள் உரிய நேரத்தில் கிடைத்தாக வேண்டும். மழைக்காலம் முடிந்த பிறகு உரத்தை அளித்தால் என்ன பயன்.
அடுத்தபடியாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. பள்ளிக்கூடங்களின் கல்வித்தரம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றில் மாவட்ட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். உணவு தானியங்கள் சேதம் அடைய இடமளிக்கக் கூடாது. அதைப்போல் திருடு போகவும், வேறு பயன்பாட்டுக்கு அதை திருப்பி விடவும் இடம் கொடுக்கக் கூடாது.
கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன் வளத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை மற்றும் அண்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாடு தடுப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உத்தேசித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் டோக்கன் முறை மூலம் தற்போது ஒரு நாள் மட்டுமே கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனி நடுக்கடலில் பல நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஈரோட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகே மேம்பாலம் கட்டப்படும். காரமடை வழியாக ஊட்டிக்கு புதிய பாதை கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை நெரிசல் தவிர்ப்பதற்காக லாரிகள் நிறுத்த தனியிடம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மீன் வளத் தொழில் நுட்ட மையம் உருவாக்கப்படும். இது நாகப்பட்டினத்தில் அமையவிருக்கிற மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். பொன்னேரியில் உள்ள வருவாய்த்துறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. இந்த புதிய பிரிவு அம்பத்தூர், மாதவரம் தாலுக்காக்களில் தொடங்கப்படுகிறது. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தலைமை இடமாக செயல்படும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் திருவிழாவிற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி 50 சதவீதமாக உயர்த்தப்படும். கடலில் மீன் பிடிக்க செல்லும் நமது மீனவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார்கள் வருகின்றன. அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்பதற்காக வாடகை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடைபெறும். இந்த மீட்பு பணியில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு அதிவேக நவீன படகுகள் வழங்கப்படும். தூத்துக்குடி நகரத்திற்கு கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்படும். தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள விவிடி சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை சேர்ப்பதற்கான பயிற்சி சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வருகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய அரசு விடுதிகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் அங்கு தேவைக்கு அதிகமாக உள்ள மாம்பழங்களை வாங்கி மேங்கோ மில்க் ஷேக் தயாரித்து சத்துணவு மையங்களுக்கு வழங்குவது பற்றி ஆவின் நிறுவனம் பரிசீலிக்கும். மேட்டூர் அணை ஜனவரி மாதம் மூடப்பட்டதும் அணை மற்றும் கால்வாய்கள் பராமரிப்பு பணி தொடங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படும் போது அவர்கள் அங்கிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க திருவள்ளூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பகுதி தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளியின் ஓய்வூதியம் பெறும் வயது 45-ல் இருந்து 18 ஆக குறைக்கப்படும். ஒவ்வொறு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சட்ட உதவிக்காக உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, பிரிண்டரும் வழங்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட 43 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன