முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - ஏரி நீரில் மூழ்கி இறந்த பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசனின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பொன்னேரி வட்டம், சோழவரம் ஏரியில் 13.11.11 அன்று குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயறுற்றேன்.

இந்த விபத்தில் அகால மரணமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் காலமான வெங்கடேசன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்