முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடி மையங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.16 - அங்கன்வாடிகளில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வ இராமஜெயம் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். சமூகநலத்துறை அமைச்சர் செல்வி இராமஜெயம் சென்னை, இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற 8 அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உடனிருந்தனர்.

ஆய்வின்பொழுது அமைச்சர் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்ற உணவு உரிய நேரத்தில் வழங்கப்படுகிறதா என்றும் சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் மேலும் அங்கு பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகள், விளையாட்டு பொருட்களின் எண்ணிக்கை அனைத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வு நேரத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்கள் தெரிவித்த சில கோரிக்கைகளான குழந்தைகளுக்கு கழிப்பறை கட்டித் தருதல், தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருதல் மற்றும் குறிப்பாக சளி போன்ற உபாதைகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் உரிய நேரத்தில் வழங்கப்படுதல் ஆகியவற்றை முன்வைத்தனர். கவனமுடன் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகளை உடனடியாக வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்