முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேம் 999 படம்: கேரளாவில் தடை இல்லையாம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ.25 - டேம் 999 ஒரு சினிமா படம். அதை தடுக்க மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், டேம் 999 படத்தை தடை செய்ய எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. அது ஒரு சினிமா படம். அதை தடுக்க மாட்டோம். பிரச்சினை அதுவல்ல. அணைதான் என்றார் உம்மன் சாண்டி. 

கடந்த 1886 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. தற்போது அணையில் 136 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணை பழுதடைந்து விட்டதாக கூறி அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கேரள அரசு. இதற்கான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் பழைய அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 என்ற ஆங்கில படம் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்