முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் தற்காலிகமாக நிறுத்தம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி, நவ. - 26 - தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  13.6.2011 ல் இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளமிங்கோ லைனர் என்ற நிறுவனம் இந்த கப்பலை இயக்கி வருகிறது. ஆரம்பத்தில் இந்த கப்பலில் அதிக பயணிகள் பயணமானார்கள். நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்த நிலையில் கடந்த 18 ம் தேதி கொழும்பு சென்ற கப்பல் பின்னர் திரும்பவே இல்லை.  கப்பல் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாகவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர். இதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரத்தில் வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவித்தனர். ஆனால் பயணிகள் மத்தியில் இருந்த ஆர்வக் குறைவு மற்றும் கப்பலுக்கு வருவாய் இல்லாததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்