முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமுதி ஆயுதப்படை காவலர் மரணத்திற்கு முதல்வர் இரங்கல்:ரூ.2 லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 28 - கமுதி ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த கார்த்திக் பணியில் இருந்தபோது காலமானார் என்ற செய்தி கேட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கலும், ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஆயுதப் படை  14​வது பட்டாலியன் பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த சு.கார்த்திக் என்பவர் 25.11.2011 அன்று பணியில் இருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க துயருற்றேன். காவலர் கார்த்திக்  பணியில்  ஈடுபட்டிருந்த போது  காலமானார் என்னும் செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. கார்த்திக்கின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  கடமையாற்றிக் கொண்டிருந்த போது காலமான காவலர்   சு.கார்த்திக்கின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்